நாடு பூராகவும் நேற்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை முடக்கம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டமும் வழமைக்கு மாறாக காணப்பட்டது.
மட்டக்களப்பு நகர பகுதிக்குள் கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த பொது முடக்கத்துக்கு மட்டக்களப்பு பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி மட்டக்களப்பு நகரப் பகுதிக்குள் வாகனங்கள், மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்தினை குறைத்து ஆதரவு வழங்கியமையை காணக்கூடியதாக இருந்தது.
அத்துடன், மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரிகள் வெளியில் நடமாடும் மக்களை அவதானிப்பதற்காக பிரதான வீதிகளில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.
No comments: