மகராஜா குழுமத்தின் தலைவர் அமரர் ராஜமகேந்திரன் அவர்களின் மறைவையொட்டி ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பில் இரங்கல் தொவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரும்பான்மை சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் சாதகமாகவே ஊடகங்கள் செயற்பட்டு வந்த காலத்தில் தமிழ் பேசும் சமூகத்தினது குறை நிறைகளையும் வெளி உலகிற்குக் கொண்டு வரும் முகமாகவும், அரசாங்கத்தின் எதிர்மறையான விடயங்களை விமர்சனம் செய்யும் விதமாகவும் ஊடக தர்மத்தை முறையே கையாண்டு ஒரு ஊடக நிறுவனத்தை ஆரம்பித்து இன்று வரை அதனை முதல் நிலையில் வைத்திருப்பதற்கு அயராது உழைத்த மனிதர் அமரர் ராஜமகேந்திரன்.
முன்பெல்லாம் தமிழ் மக்களின் செய்திகள் வெளிநாட்டு ஊடகங்களில் மாத்திரம் வெளிவந்து கொண்டிருந்த தருவாயில் உள்நாட்டு மக்களுக்கும் நிலைமைகள் விளங்க வேண்டும் என்ற நோக்கோடு பெரும் சிரமத்தின் மத்தியில் ஒரு ஊடக நிறுவனத்தை ஆரம்பித்து இன்றுவரை தமிழ் பேசும் மக்களின் சக்தியாக விளங்கிக் கொண்டிருக்கும் ஊடகத்தின் தலைவரின் மரணமானது எம்மையெல்லாம் ஆழந்த கவலைக்குள் தள்ளியுள்ளது.
தமிழ் மக்களின் பல்வேறு பட்ட பிரச்சனைகளை வெளியுலகிற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாது. எவர் தவறிழைத்தாலும் எவ்வித பக்கச் சார்பும் இன்றி ஊடக தர்மத்தின் பால் செயற்பட்டவர். தமிழர்களின் அரசியற் பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பிரச்சினைகள், அரசியற் கைதிகளின் பிரச்சினைகள், முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள் எனப் பல்வேறு பிரச்சனைகளின் போதும் தமிழ் மக்களோடு தோளோடு தோள் நின்றுழைத்த ஊடக நிறுவனத்தின் தலைவரின் மறைவானது தமிழ் மக்களுக்கு மட்டுடமல்லாது நாட்டின் அனைத்து மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அந்நாரின் மறைவிற்கு முன்னாள் போராளிகள் என்ற வகையில் எமது ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு. தொடர்ந்து அவரின் ஊடக விழுமியங்களைப் பேணும் வகையில் மகாராஜா குழும ஊடகங்கள் செயற்பட்டு அவர் இறப்பினும் இருப்பதாக மக்கள் உணரும் வகையில் முன்நகர்த்த வேண்டும் என்று தெரிவித்தார்.
No comments: