News Just In

6/13/2021 07:08:00 PM

O/L பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்து 03 மாதங்கள் கடந்தும் காெடுப்பனவு வழங்கப்படவில்லை- கல்வி அமைச்சருக்கு நினைவூட்டி கடிதம்!!


க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று மூன்று மாதங்கள் கடந்தும் இன்னமும் காெடுப்பனவுகள் வழங்கப்படாமை குறித்து இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் கல்வி அமைச்சருக்கு நினைவூட்டி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்டு, பரீட்சைத் திணைக்களம் 2021 மார்ச் 1 முதல் 4513 மையங்களில் 6,62000 மாணவர்களின் பங்குபற்றிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளை நடத்தியது. மதிப்பீடு செய்வதில் ஈடுபட்டிருந்த அதிபர்கள் மற்றும் பதில் உள்ளிட்ட கல்விசாரா ஊழியர்களின் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் செலுத்தப்படாதது கவனம் செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வேண்டியுள்ளது.

தற்போதைய நிலையில் ஆசிரியர்களும் அதிபர்களும் கல்வி சார் ஊழியர்களும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் மிகுந்த செலவுக்கு மத்தியிலும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் கலந்து கொண்டிருந்தனர். எனவே, அதற்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கல்வி அமைச்சின் செயலாளருக்கும் பரீட்சைகள் ஆணையாளருக்கும் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியது. எனினும் இது குறித்து இதுவரை எந்த கவனமும் செலுத்தப்படவில்லை என்று தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, கோரிக்கைகளைக் கவனத்திற் கொண்டு மிகவிரைவில் கொடுப்பனவுகளை வழங்குமாறு சங்கம் கோரியுள்ளது.

No comments: