News Just In

6/14/2021 08:26:00 PM

மட்டக்களப்பில் இன்று 97பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் உயிரிழப்பு- இதுவரை 21509 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது...!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று(14) 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 21509 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில்,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேருக்கும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும்
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும்
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும்
வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும்
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும்
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேருக்கும்
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09பேருக்கும்
மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குமாக இன்று மாத்திரம் 97 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


அத்துடன் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, இன்று(2021.06.14) ஏழாவது நாளாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைக்கு அமைய மொத்தமாக 21509 தடுப்பூசிகள் இதுவரை ஏற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதில்,
2021.06.08 அன்று 1351 தடுப்பூசிகளும்
2021.06.09 அன்று 3476 தடுப்பூசிகளும்
2021.06.10 அன்று 4321 தடுப்பூசிகளும்
2021.06.11 அன்று 2827 தடுப்பூசிகளும்
2021.06.12 அன்று 4434 தடுப்பூசிகளும்
2021.06.13 அன்று 3550 தடுப்பூசிகளும்
2021.06.14 அன்று 1554 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி,
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4225 தடுப்பூசிகளும்
ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2602 தடுப்பூசிகளும்
செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1978 தடுப்பூசிகளும்
கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 840 தடுப்பூசிகளும்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1306 தடுப்பூசிகளும்
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1390 தடுப்பூசிகளும்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2250 தடுப்பூசிகளும்
வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 274 தடுப்பூசிகளும்
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1819 தடுப்பூசிகளும்
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1068 தடுப்பூசிகளும்
களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1574 தடுப்பூசிகளும்
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 590 தடுப்பூசிகளும்
பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 898 தடுப்பூசிகளும்
வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 666 தடுப்பூசிகளுமாக மொத்தம் 21509 கொரோனா தடுப்பூசிகள் மட்டக்களப்பின் 14 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: