News Just In

6/14/2021 06:47:00 PM

மட்டக்களப்பில் மேலும் 4 பொலிஸ் நிலையங்களை திறக்க அனுமதி- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க!!


பொலிஸ் மா அதிபரின் அனுமதிக்கு அமைய புதிதாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இந்த மாத இறுதியில் உத்தியோக பூர்வமாக திறப்பதற்கான ஏற்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவரும் நிலையில் மேலும் புதிதாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைப்பதற்காக பொலிஸ் மா அதிபர் அனுமதி வழங்கியதையடுத்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புணானை பொலிஸ் சோதனை சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி புணானை பொலிஸ் நிலையமாகவும்,

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பிரிவிலுள்ள சந்திவெளி கேரக்காவெளிமடு பகுதில் சந்திவெளி பொலிஸ் நிலையமாகவும், மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கொக்குவில் பொலிஸ் சோதனைச் சாவடியாக இயங்கிவரும் சோதனைச்சாவடி கொக்குவில் பொலிஸ் நிலையமாகவும், காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்ப்பலா பிரதேசத்தில் கர்ப்பலா பொலிஸ் நிலையமாகவும் 4 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

இந்த அனுமதியையடுத்து அந்த பகுதிக்கு உதவி பொலிஸ்மா அதிபர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், குறித்த இடங்களை பார்வையிட்டு அந்த பகுதிகளில் பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பொலிஸ் பிரிவு எல்லைகள் தீர்மானிக்கப்பட்டு அதற்கான சகல நடவடிக்கைககளும் எடுக்கப்பட்டு தற்காலிகமாக கடமைகள் இயங்க ஆரம்பித்துள்ளதுடன் இந்த மாதக் கடைசியில் சம்பிராய பூர்வமாக பொலிஸ் நிலையம் திறப்பதற்காக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: