News Just In

6/17/2021 08:02:00 AM

90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகள் திருட்டு- பொலிஸில் முறைப்பாடு...!!


நாட்டில் கொரோனா தொற்று நிலையினை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கையானது தொடர்ந்தும் சகல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகளை திருடியமை தொடர்பில் ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

அதனடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தில் கடமையாற்றும் ஒருவர் மற்றும் வாகன ஓட்டுநர் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments: