News Just In

6/17/2021 07:48:00 AM

மட்டக்களப்பில் கொரோனா சிகிச்சைக்காக 10இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டில்கள் இராஜாங்க அமைச்சர் வியாளேந்திரனின் வேண்டுகோளில் தனியார் நிறுவனம் அன்பளிப்பு...!!


(மட்டக்களப்புமொகமட் தஸ்.ரீப் )
இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் விடுத்த வேண்டுகோளையேற்று கொவிட் 1 9 (கொரோனா) வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையத்தின் பயன்பாட்டுக்கு பயன்படுத்த சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வசதிகள் கொண்ட 30 கட்டில்களை அன்பளிப்பு செய்வதற்கு தனியார் வர்த்தக நிலையமொன்று முன்வந்துள்ளது.

மட்டக்களப்பில் செயல்படும் ஆஞ்சநேயர் தனியார் வர்த்தக நிறுவனம் இந்த அன்பளிப்பினை செய்வதற்கு முன்வந்துள்ளது.

இதற்கமைய குறித்த கொரானா வைரஸ் தடுப்பு சிகிச்சை நிலையத்துக்கான கட்டில்களை உத்தியோக பூர்வமாக அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக வளவில் இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது ஆஞ்சநேயர் தனியார் வர்த்தக நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர்.சண்முகராஜா நிரோஷன் இந்த அன்பளிப்பினை இராஜாங்க அமைச்சர் வியாலேந்திரன் முன்னிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரனிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக உயரதிகாரிகள் பலரும் சமூகமளித்திருந்தனர்.





No comments: