News Just In

6/18/2021 02:37:00 PM

சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் ஆயிரத்து 7500 ரூபா விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!!


(பைஷல் இஸ்மாயில்)
சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ஜுன் மாதம் முதல் மூன்று மாத காலப் பகுதிக்கு 7500 ரூபா வீதம் விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என்று சுகாதார சுதேச மருத்துவத் துறை அமைச்சு அதற்கான சுற்று நிருபத்தை 2021.06.16 ஆம் திகதிய கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கொவிட் 19 கொரோனா பரவல் நிலைமைக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் சுகாதாரத் துறையின் அனைத்து தர உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சுகாதார அமைச்சின் கீழ் இணைப்பு செய்யப்பட்டு கடமையாற்றி வருகின்ற அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கும் இக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த கொடுப்பனவை பெறுவதற்கு வைத்தியசாலைகளில் கடமையாற்றி வரும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதலானோரும் தகமை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments: