இலங்கையில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 24 போதைப்பொருள் கடத்தலகாரர்களுக்கு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள குறித்த கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸார் ஊடாக இவ்வாறு சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் 13 பேர் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளார், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதுடன், மேலும் 11 பேர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
6/20/2021 10:44:00 AM
போதைப்பொருள் கடத்தலகாரர்கள் 24 பேருக்கு சிவப்பு அறிவித்தல்...!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: