News Just In

11/08/2020 03:01:00 PM

நாளை முதல் பேருந்து போக்குவரத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள முக்கிய கொள்கைகள் வெளியாகியது!!


கொவிட் போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை (09.11.2020) தளர்த்தப்பட்ட பின்னர், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட்ட வேண்டியதொன்றாக பொதுப் போக்குவரத்து காணப்படுகின்றது.

போக்குவரத்து தொடர்பில் 3 நடைமுறைகள் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண நடைமுறையில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமாயின் அதாவது ஆசனங்களில் அமர்ந்தும், நின்றும் பயணிப்பதாயின் கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

மாறாக, ஆசனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மற்றும் ஒரு ஆசனத்திற்கு ஒருவர் என்ற ரீதியில் பயணிப்பதாயின் கட்டணத்தில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: