News Just In

8/19/2026 06:00:00 AM

காத்தான்குடியில் புதிய ஜனாதிபதி.. அநுரவுக்கு எதிராக கூடிய ஆறு கட்சிகளின் முடிவு என்ன!

காத்தான்குடியில் புதிய ஜனாதிபதி.. அநுரவுக்கு எதிராக கூடிய ஆறு கட்சிகளின் முடிவு என்ன!


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் ஊழியர்களில் சிலர் சீருடை அணியாமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் ஒரு மதப் பிரச்சினையாக மாற்றப்பட்டு, இனங்களுக்கிடையே குரோதத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பேசுபொருளாகிய இவ்விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லா நேரடியாகத் தலையிட்டிருந்தார்.

இந்நிலையில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஒருவர் முன்னதாக ஹிஸ்புல்லா தொடர்பில் முன்வைத்திருந்த நையாண்டிக் கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

நாட்டிற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க என்ற போதிலும், காத்தான்குடி பொறுத்த மட்டில் ஹிஸ்புல்லா தான் ஜனாதிபதி என குறிப்பிட்டிருந்தார்.

No comments: