News Just In

11/03/2020 06:48:00 PM

அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தாக்கங்களை எதிர்கொள்ள வேண்டும்- சுகாதார அமைச்சர்!!


கொவிட் -19 வைரஸ் பரவலை இப்போது கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வந்தாலும் கூட மீண்டும் கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாம் கொவிட் -19 வைரஸ் தாக்கங்களுக்கு முகங்கொடுத்தாக வேண்டும் எனவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் நாம் அரசியல் சார்ந்து செயற்படவில்லை. உலக சுகாதார ஸ்தாபனமும் தொடர்ச்சியாக இதனை வலியுறுத்தி வருகின்றனர். எனவேதான் தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கும் வேளைகளில் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய செயற்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் நாம் இயங்கினோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: