News Just In

11/09/2020 08:51:00 AM

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 2923 பேர் கைது...!!


தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரப் பகுதியில் 91 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதன்போது 12 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2,923 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 438 வாகனங்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: