News Just In

11/11/2020 09:25:00 PM

கிழக்குக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்வு!!


கிழக்கு மாகாணத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்றுறதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து  கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 111ஆக உயர்வடைந்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பகுதியை சேர்ந்த நபருக்கே இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் 68 பேரும் திருகோணமலையில் 15 பேரும் கல்முனையில் 21 பேரும் அம்பாறையில் 7 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படியில், கிழக்கு மாகாணத்தில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.

மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும் சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமாயின் உரிய பிரதேசங்களின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments: