News Just In

9/22/2020 12:31:00 PM

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் நியமனம்!!


மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்ட  அபிவிருத்தி குழு தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவினால் நியமனம்.

இவர் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்கினைப்பெற்று பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்குரிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பெற்று கொண்டார்.

No comments: