News Just In

9/16/2020 11:13:00 AM

சற்று முன்னர் ஏற்பட்ட பாரிய விபத்து!- மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!!


இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் லொறியொன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று (புதன்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த 48, 53, 57 வயதுடையவர்களே விபத்தில் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments: