News Just In

9/23/2020 10:08:00 AM

பாரவூர்திகளின் மூலம் சலுகை விலையில் தேங்காய் விற்பனையை மேற்கொள்ள நடவடிக்கை!!


கொழும்பு உட்பட ஏனைய சில பகுதிகளில் இன்று முதல், பாரவூர்திகளின் மூலம் சலுகை விலையில் தேங்காயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக பெருந்தோட்டத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 60 ரூபா என்ற சலுகை விலையில், நாடாளாவிய ரீதியில் தேங்காயை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தெங்கு உற்பத்தி சபையானது, மேலும் சில நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: