ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் நுழைவாயிலில் சனிக்கிழமை 25.09.2020 காலையில் காவற் கடமையில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மயங்கி விழுந்து மரணமானதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் சேரன்கடவ பதியதலாவை பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய அபயவீர வர்ணப்பட்ட வெண்டிக்கே லால் ரஞ்சித் டி வில்வா என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நுழைவாயிலில் காவற் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது காலை 8.40 மணியளவில் திடீரென மயங்கியுள்ளார். உடனடியாக அவசர அம்பியூலன்ஸ் 1990 அழைக்கப்பட்டு காலை 8.48 இற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதும் காலை 8.56 இற்கு அவரது உயிர் பிரிந்து விட்டமை அறிக்கையிடப்பட்டுள்ளதாக பிரதேச மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் தெரிவித்தார்.
சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுப் பரிசோதனை அறிக்கையில் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில் மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மரண விசாரணை அதிகாரி ஜீவரெத்தினம் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9/27/2020 11:38:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பு- நீதிமன்ற காவல் கடமையில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி விழுந்து திடீர் மரணம்!!
மட்டக்களப்பு- நீதிமன்ற காவல் கடமையில் நின்றிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மயங்கி விழுந்து திடீர் மரணம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: