இறுதியாக தொற்றுறுதியான மூவரும் ஐக்கிய அரபு ராச்சியம், சிங்கப்பூர் மற்றும் குவைட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும், நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானது.
இதன்படி, நாட்டில்கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3155 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 9 பேர் நேற்று குணமடைந்தனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 2955 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
188 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
No comments: