மட்டக்களப்பு நகரில் கட்டார் பிளாசா ஹாலண்டியா நிறுவனத்தின் ஊழியர்களின் நிதி உதவியின் கீழ் மேற்படி நிறுவனம் பல்வேறு சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த வரிசையில் தற்போது கல்லடி உப்போடையில் உள்ள இந்து மயானத்தில் 5 மில்லியன் ரூபாவில் இறுதி அஞ்சலி செலுத்தும் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது .
இதனை குமுகாய மேம்பாட்டு மன்றம்(SAFE) அமுல் படுத்திவருகின்றது. குமுகாய மன்றத்தின்(SAFE)தலைவரும், மாநகர முதல்வருமான கௌரவ தியாகராஜா சரவணபவான் அவர்கள் இதனை வழி நடாத்தி வருகின்றார்.
மண்டபத்தின் அமைப்பு பணிகள் தொடர்பாக பிளாசா ஹாலண்டியா நிறுவனப் பிரதி நிதிகள் நேற்றுமுந்தினம் (2020.09.09) மாலை குமுகாய மன்றப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் குமுகாய மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் தியாகராஜா சரவணபான், செயலாளர் சிவானந்தராஜா விபுலானந்தராஜா, பொருளாளர் மயிலிப்போடி லட்சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் அல்மக்ராப் நிறுவனத்திற்கு மட்டக்களப்பு நகர மக்களின் சார்பாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் நன்றிகளை தெரிவித்தார்.
அத்துடன் இக் கலந்துரையாடலின் போது எதிர்காலத்தில் பிளாசா ஹாலண்டியா நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
No comments: