News Just In

9/20/2020 08:52:00 PM

வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு...!!


இலங்கையில் வாகன இறக்குமதி இடைநிறுத்தம் மற்றும் உள்நாட்டு சந்தையில் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையாலும் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வைடந்துள்ளது.

மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரஞ்சிகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மகிழூர்தி உள்ளிட்ட ஏனைய அனைத்து வாகனங்களின் விலைகளும் ஒரு லட்சம் முதல் 50 லட்சம் வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments: