இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 269 ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.
இன்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 15 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அனைவரும் கொழும்பில் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
91 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
171 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments: