News Just In

2/01/2020 08:20:00 AM

சீன மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் -அதுரலிய ரத்ன தேரர்

சீன நாட்டு மக்களை கண்டு அச்சமடைய வேண்டாம் எனவும் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் குணமடைய பிரார்த்திக்குமாறும்  பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தாக்கம் உலகளாவிய ரீதியிலும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் இதன் தாக்கம் பரவுவதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது என தெரிவித்த அதுரலிய ரத்ன தேரர்

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிடம்  சீனாவில் மிருக கொலையை நிறுத்த சட்டமொன்றை கொண்டுவருமாறு கோரிக்கையினையும் முன்வைத்தார்.

No comments: