News Just In

1/26/2020 07:09:00 PM

மட்டக்களப்பில் முதிரை மரத் தளபாடங்கள் ஏற்றி வந்த வாகனத்துடன், இருவர் கைது


அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரத் தளபாடங்கள் ஏற்றி வந்த வாகனமும், சந்தேக நபர்கள் இருவரும், மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி, ஓட்டமாவடியில் வைத்து இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை வட்டார வன இலாகா உத்தியோகத்தர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்து வரக்காப்பொல பிரதேசத்துக்கு மேற்படி வாகனம் பயணித்த வேளையில், வாழைச்சேனை வன இலாகா திணைக்களத்தின் அதிகாரிகளின் நடவடிக்கையின் மூலம் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து அனுமதிப்பத்திரமின்றிக் கொண்டுவரப்பட்ட முதிரை கட்டில்கள் இரண்டும், முதிரை அலுமாரி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வட்டார வன உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

No comments: