News Just In

1/28/2020 08:41:00 PM

இலங்கையில் மிருகங்களால் கொரானா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதா..?


சீனாவில் கொரோனா ஆட்கொல்லி வைரஸ் மிருகங்களில் இருந்தே ஆரம்பத்தில் பரவியிருந்தது. அதன் பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு அது பரவியது.

எனினும் தற்போது இலங்கையில் மிருகங்களில் இருந்து இந்த வைரஸ் பரவுவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என மத்திய மாகாண மிருக உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஆர்.எம்.கே.பீ.ராஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சீனாவில் இந்த வைரஸ் ஆரம்பமாக ஏற்பட்டிருப்பது வெளவால் மற்றும் பாம்பினால் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

No comments: