News Just In

1/29/2020 08:09:00 AM

கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண்ணின் உடல் நிலை..?-இலங்கை சுகாதார அமைச்சு


கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண் விசேட சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நடைமுறையின் கீழ் அங்கொடை தொற்று நோயியல் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.

அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 43 வயதான சீனப் பெண் கடும் காய்ச்சல் காரணமாக அங்கொடை தொற்று நோயியல் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

இரத்தப் பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடர்ந்தும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: