News Just In

1/31/2020 10:48:00 AM

கொரோனா வைரஸ் எதிரொலி-உலக சுகாதார ஸ்தாபனத்தால் அவசரகால நிலை பிரகடனம்!

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் 9,816 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், சீனாவில் மாத்திரம் 9,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 213 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து நேற்றைய தினம் இடம்பெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) விசேட கூட்டத்தில், உலக நாடுகளுக்கு அவசர கால நிலையை பிரகடனம் செய்துள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ள சீனாவுக்கு சர்வதேச நிபுணர் குழு ஒன்றை உலக சுகாதார அமைப்பு அனுப்பி வைத்து உள்ளது. சீனாவிலும், உலக அளவிலும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதே தங்களின் உயர்ந்தபட்ச நோக்கம் ஆகும் என அந்த அமைப்பின் தலைவர் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

No comments: