புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
பிரியந்த ஜயவர்தன, ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாமினால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏழு குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
12/06/2019 07:57:00 PM
Home
/
உயிரிழப்பு
/
உள்ளூர்
/
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
மாணவி வித்தியா படுகொலை வழக்கின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments: