News Just In

12/07/2019 12:48:00 PM

வெள்ள அனர்த்தத்தால் ஏற்பட்ட விவசாய உற்பத்தி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை

தற்பொழுது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக விவசாயத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலையினால் கிழக்கு மாகாணத்தில் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: