சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்குப் பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போது, அவர்கள் தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை எனத் தெரிவித்து வைத்தியசாலைப் பணியாளர்களையும் தாதிய உத்தியோகத்தர்களையும் தாக்கிக் காயப்படுத்தியதுடன் வைத்தியசாலை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து தாக்கி சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இருந்த போதும் ஒருவர் கைவிலங்கோடு பொலிஸாரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
எனினும் இளைஞர்கள் மீண்டும் அந்த இளைஞரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேக நபர்கள் இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்குப் பின் மருந்து கட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருந்த போது, அவர்கள் தமக்கு உடனடியாக மருந்து கட்டவில்லை எனத் தெரிவித்து வைத்தியசாலைப் பணியாளர்களையும் தாதிய உத்தியோகத்தர்களையும் தாக்கிக் காயப்படுத்தியதுடன் வைத்தியசாலை தளபாடங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
கடமையிலிருந்த பாதுகாப்பு பணியாளர்களையும் இரும்பு கம்பிகளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது அங்கு குழுமிய அப்பகுதி இளைஞர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து தாக்கி சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இருந்த போதும் ஒருவர் கைவிலங்கோடு பொலிஸாரிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
எனினும் இளைஞர்கள் மீண்டும் அந்த இளைஞரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேக நபர்கள் இருவரும் வேறு வழக்குகளில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: