அரச நிறுவனங்கள் தனியார் கட்டடங்களில் இயங்கி வருவதால், மேலதிகமாக செலவுகள் ஏற்படுவதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.
தற்போது வரை சில அமைச்சுகள் மற்றும் அமைச்சின் சில பிரிவுகள், சில அரச நிறுவனங்கள், தனியார் கட்டடங்களில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான கட்டடங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சில கட்டடங்களின் ஒப்பந்தங்கள் நிறைவுபெறாதமையால் அவை தொடர்ந்தும் அரச நிறுவனங்களாக முன்னெடுக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments: