News Just In

12/06/2019 04:02:00 PM

மட்டக்களப்பு மரியதாசன் சூசைதாசன் அவர்களுக்கு கீர்த்தி ஶ்ரீ விருது

மட்டக்களப்பைச் சேர்ந்த மரியதாசன் சூசைதாசன் கீர்த்தி ஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையின் ஏற்பாட்டில் சமாதான நீதவான்களாக சேவையாற்றியவர்களை கொளவிக்கும் வகையில் இந் நிகழ்வு அண்மையில் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு தன்னாமுனையைச் சேர்ந்த மரியதாசன் சூசைதாசன் கீர்த்தி ஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இவரால் மேற்கொண்ட சமுக சேவையைப் பாராட்டி இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் தேசகீர்த்தி எம்.ஐ.எம். பௌசில், இலங்கை சமாதான நீதவான்கள் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி பஹப் ஏ.மஜித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



No comments: