News Just In

11/21/2019 05:46:00 PM

தெற்காசிய விளையாட்டுப் போட்டி-இலங்கை நீச்சல் அணிக்கு விசேட பயிற்சி

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை நீச்சல் அணிக்கு தியதலாவையில் விசேட பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் நீச்சல் போட்டியில் 21 பேர் அடங்கிய அணி பங்கேற்கவுள்ளது. இதில் பத்து வீராங்கனைகள் உள்ளடங்குகின்றனர். இந்த நீச்சல் அணி அடுத்த மாதம் முதலாம் திகதி நேபாளத்திற்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. அடுத்த மாதம் 5ஆம் திகதி நீச்சல் போட்டி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: