News Just In

11/29/2019 07:30:00 AM

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் விரைவில் வழங்கப்படும்-கல்வி அமைச்சர்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் வழங்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வார காலப்பகுதியில் வவுச்சர்களை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் ஹோமாகம மஹிந்த ராஜபக்ஸ கல்லூரிக்கு நேற்று (28) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டு பாடசாலையில் நடைபெற்ற காலை நேர கூட்டத்தில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments: