News Just In

11/23/2019 01:55:00 PM

காளானை சமைத்து சாப்பிட்ட குடும்பத்தினர் வைத்தியசாலையில் அனுமதி


விஷத்தன்மையுடைய காளான் ஒன்றை உணவிற்கு எடுத்துக் கொண்ட குடும்பமொன்றில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீகஹகிவுல அராவ வீதி பிரதேசத்தை குடும்பத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காட்டுப்பகுதியில் மலர்ந்திருந்த குறித்த காளானை உணவிற்கு எடுத்துக் கொண்ட பின்னர் ஏற்பட்ட அதிக வாந்தி, குமட்டல், மயக்கம் காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உணவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காளானின் மாதிரிகளை பரிசோதனை செய்த பின் காளானில் நச்சுத்தன்மை ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: