News Just In

11/27/2019 09:35:00 AM

சீரற்ற காலநிலை காரணமாக 05பேர் உயிரிழப்பு! மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையால் 05 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தோடு 573 குடும்­பங்­களைச் சேர்ந்த 2,272 பேர் பாதிக்­கப்­பட்­டுள்ளனர்.

சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள மாவட்டங்கள் 
யாழ்ப்­பாணம்
கிளி­நொச்சி
முல்­லைத்­தீவு
வவு­னியா
மன்னார்               
திரு­கோ­ண­மலை 
பொல­ன­றுவை
மட்­டக்­க­ளப்பு
அம்­பாறை 

இதேவேளை நாட்டில் வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாக நாடு முழுவதும் தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணப்படும் மழையுடனான வானிலையில் குறிப்பாக இன்று இரவு முதல் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அம்பாறை, பதுளை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 தொடக்கம் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மிற்றர் அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments: