
எருவில் இன்டிப்பென்டன் விழையாடுக் கழகம் எருவில் வடக்கு இளைஞ்ஞர் கழகம் மற்றும் கலைக் கமல் கலா மன்றம் இணைந்து நடாத்திய சிறுவர் முதியோர் தின சிறப்பு நிகழ்வு நேற்று (13) எருவில் கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு பாலர் பாடசாலை செயலாற்றுப் பணிப்பாளர் எஸ்.சசிகரன், மண்முனை தென்நெருவில்பற்று தவிசாளர் யோகநாதன்,
விசேட அதிதிகளாக மண்முனை தென்நெருவில்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் சி.காண்டீபன், இ.வினோதினி, ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் பா.வரதராஜன், மற்றும் சிறப்பு அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள், அதிதிகள் உரை, பரிசு வழங்கல் போன்றவை இடம்பெற்றன.
No comments: