News Just In

10/08/2019 09:30:00 AM

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக நிலத்தை அகழ்ந்த போது மோட்டார் குண்டு ஒன்றை திங்கட்கிழமை (07.10.2019) மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியாகும். இக்காணியிலே கட்டிட நிர்மாண வேலைக்காக நிலத்தைக் கனரக இயந்திரம் மூலம் அகழ்ந்த போது மோட்டார் குண்டொன்று வெளிவந்ததையடுத்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவு மற்றும் பொலிசார் குறித்த குண்டை மீட்டனர்.

No comments: