News Just In

6/03/2026 03:49:00 PM

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை! இலங்கை பெண்ணுடன் சென்ற சிறுமியும் உயிரிழப்பு!

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய இரட்டைக்கொலை! இலங்கை பெண்ணுடன் சென்ற சிறுமியும் உயிரிழப்பு



சென்னை - கோயம்பேடு நட்சத்திர கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட திடீர் மோதலில் இளம்பெண்கள் மீது காரை ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மற்றுமொரு 17 வயது சிறுமியும் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளமை சென்னையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 30 ஆம் திகதி இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், நேற்று முன்தினம் (30) சென்னையை சேர்ந்த பெண்ணுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்தபோது ஏற்பட்ட தகராறில் குழுவொன்றினால் காரை வேகமாக ஏற்றிகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சிறுமி பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சி ஒன்றின் கொடி கட்டப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மோதல் இடம்பெற்ற கோயம்பேடு கேளிக்கை விடுதிக்கு அதிகாரிகள் தற்போது சீல் வைத்துள்ளதுடன், இந்த இரட்டைக்கொலை சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: