News Just In

10/15/2019 02:05:00 PM

இரட்டைக் கொலைச் சம்பவம் - குற்றவாளிக்கு மரண தண்டனை

இரத்தினபுரி கொட்டகெத்தன என்ற இடத்தில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்தின் குற்றவாளியான நபருக்கு இன்று (15.10.2019) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கொட்டகெதன பகுதியில் வைத்து நயனா நில்மினி என்ற 52 வயதுடைய பெண்ணும் 17 வயதுடைய காவிந்யா சதுரங்கி செல்லஹேவா என்ற அவரது மகளும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் மகளை கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட லொகுகம்ஹேவாகே தர்ஷன எனும் ராஜு என்பவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களு ஆராச்சி மரணதண்டனை விதித்தார்.

No comments: