News Just In

10/21/2019 12:30:00 PM

மட்டக்களப்பு சிறையிலிருந்து கைதியொருவர் தப்பியோட்டம்

மட்டக்களப்பு சிறையில் தண்டனை பெற்றுவந்த சிறைக்கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் காலை மட்டக்களப்பு திருப்பெருந்துறை பகுதியிலுள்ள பண்ணையொன்றில் வேலைக்காக கைதிகளை கொண்டுசென்றுள்ளனர்.
 
இதன்போது சிறிய குற்றமொன்றிற்காக 3 மாதகாலம் சிறைத்தண்டனை பெற்றுவந்த அக்கரைப்பற்று, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய முகமட் இஸ்மாயில் என்ற கைதி அங்கிருந்து தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: