News Just In

10/26/2019 05:17:00 PM

தேர்தல் விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகிறது - பிரதி பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதி தேர்தலுக்கான, தேர்தல் விதிகள் ஆகக் கூடிய வகையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் இது தொடர்பில் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வன்முறை செயற்பாடுகள் மற்றும் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் குறைவாகக் காணப்படுகின்றன. விதி முறைகளை கடைப்பிடிப்பதிலும் முன்னேற்றம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அமைதியையும், சட்டத்தையும் நிலை நிறுத்துவதிலும் பொலிசார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் 60 ஆயிரம் பொலிசாரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக இதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் நாலாயிரம் பேரை மேலதிக கடமைகளில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

No comments: