நேற்று (09.10.2019) இடம்பெற்ற இருபதுக்கு 20 போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களைப் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அணி சார்பில் ஹரிஸ் சொய்ல் 52 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். அதன்படி, மூன்றாவது இருபதுக்கு 20 போட்டியிலும் இலங்கை அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற இலங்கை அணி பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் வௌ்ளையடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: