இன்று (25/04/2023) சுவிஸ் தமிழர் உதவி நிறுவன பணிப்பாளர் திரு. ஆதிரையன் அவர்கள் மட்டக்களப்பு நொச்சிமுனையில் அமைந்துள்ள மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்திற்கு வருகைதந்து சங்க விடுதியில் தங்கியிருந்து கல்விகற்கும் மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறை வசதிகளை விசாரித்த அவர் உடனடித் தேவைகளான மாகாண மற்றும் தேசிய மட்ட பாட போட்டிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் மேலதிக பயிற்சிகளுக்கான வசதிகளை அதிகரிப்பதற்கான தேவைகளை கவனத்தில் எடுத்தார்.
மேலும் சுற்றுலாத்துறை முகாமைத்துவ கற்கை நெறியை சென்ற வருடத்தில் பூர்த்திசெய்த மற்றும் இவ்வருடத்தில் கற்றுக்கொண்டிருக்கின்ற உள்ளூர் இளைஞர் யுவதிகளுக்கான உள்ளூர் வேலை வாய்புகளையும் வெளிநாட்டு இளைஞர் பரிமாற்ற வாய்ப்புக்களையும் பற்றி கலந்துபேசினார்.
இச்சந்திப்பில் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபரும் காப்பாளருமாகிய திரு சி. தேவசிங்கம் அவர்களும் செயலாளர் திரு. வ கமலதாஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.
No comments: