News Just In

3/26/2023 10:46:00 AM

புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அனுமதி!

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியில் இருந்து 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் எந்தவொரு பகுதியிலும் வீதியின் இருமருங்கில் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை அமைச்சரவை பேச்சாளரும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விசேட அனுமதி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பிரதேச செயலகங்களில் அறிவித்த பின்னர் இடையூறின்றி தங்களது உற்பத்திகளை வீதியின் இருமருங்கிலும் பொது மக்கள் விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments: