ஈரானின் கார்க் தீவில் (Kharg Island) உள்ள இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதை அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைக்கவில்லை என்றும், அமெரிக்காவின் தற்போதைய இராணுவ மூலோபாயத்தில் (Military Strategy) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: "கார்க் தீவில் உள்ள சில இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம், அதன் படியே தற்போது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈரானியர்கள் எம்மை திருப்திப்படுத்தும் வகையிலான ஒரு முன்மொழிவை வழங்கும் வரை, அவர்களின் எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தப் போவதில்லை."
மேலும், "கார்க் தீவு தாக்குதல் செய்தியானது அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கையிலோ அல்லது எமது மூலோபாயத்திலோ ஏற்பட்டுள்ள மாற்றமாக கருதப்படக்கூடாது" எனவும் ஜே.டி. வான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்கு வைக்கவில்லை என்றும், அமெரிக்காவின் தற்போதைய இராணுவ மூலோபாயத்தில் (Military Strategy) எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: "கார்க் தீவில் உள்ள சில இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்த நாங்கள் திட்டமிட்டிருந்தோம், அதன் படியே தற்போது தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈரானியர்கள் எம்மை திருப்திப்படுத்தும் வகையிலான ஒரு முன்மொழிவை வழங்கும் வரை, அவர்களின் எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தப் போவதில்லை."
மேலும், "கார்க் தீவு தாக்குதல் செய்தியானது அமெரிக்க ஜனாதிபதியின் கொள்கையிலோ அல்லது எமது மூலோபாயத்திலோ ஏற்பட்டுள்ள மாற்றமாக கருதப்படக்கூடாது" எனவும் ஜே.டி. வான்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
No comments: