
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற பாராளுமன்றமாக இருக்காமல்> பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற சபையாக தேசிய பேரவை இயங்குவதற்கு சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டுமென. சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய பேரவை உருவாக்குவது தொடர்பில் பிரதமர் சமர்ப்பித்த பிரேரணை தொடர்பாக நஸீர் அஹமட் மேலும் கூறியதாவது
தேசிய இனப்பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேசிய பேரவை உருவாக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சகல கட்சிகளதும் எம்பிக்கள் இச்சபையில் உள்வாங்கப்படவுள்ளனர்.
எனவே> இச்சபையில் சகலரது கருத்துக்களும் உள்வாங்கப்படும். இதனால்> இச்சபையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்து சகலரும் செயற்பட வேண்டும். இதற்கான சிறந்த ஆலோசனைகளை தேசிய பேரவை வரவேற்கும்.
கடந்த காலங்களில் நடந்தவற்றை கருத்திற்கொண்டு இப்போது அமையவுள்ள தேசிய பேரவையில் நம்பிக்கை இழக்கக் கூடாது.
தீர்வுகள் காணப்படாத விடயங்கள் குறித்து அமையவுள்ள இத்தேசிய பேரவையால் இந்நிலைமைகளை மாற்ற முயற்சிப்போம். இனியாவது தீர்வுகள் கிடைக்கட்டும். கல்வி ,சுகாதாரம் , பொருளாதாரம் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இச்சபையினூடாக பெறுவதற்கு நாம் இணைந்து செயற்படல் அவசியம். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடியும்.” என்றார்.
No comments: