News Just In

6/03/2022 06:49:00 AM

நாட்டை கட்டியெழுப்பவது தொடர்பில் சஜித் வெளியிட்ட தகவல்!

நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்ப, தமக்கு நிச்சயமாக முடியும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவிக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (02-06-2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நாடு வீழ்ச்சியடைந்து கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த அழிவு ஏற்படும் என நான் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்தே நாட்டுக்கு வெளிப்படுத்தினேன் என சஜித் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: