News Just In

6/04/2022 06:42:00 AM

மட்டக்களப்பில் மாயமான 15 வயது சிறுமி மீட்பு: நபரொருவர் அதிரடி கைது!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் காணாமல் போன 15 வயது சிறுமியை மீட்டதுடன் அந்த சிறுமியை அழைத்துச் சென்ற வவுனியாவைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவம் நேற்றைய தினம் (03-06-2022) கொக்கட்டிச்சோலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி வீட்டில் இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார். இதனையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த நிலையில் குறித்த சிறுமி 42 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட காதல் காரணமாக வீட்டை விட்டு சிறுமி வெளியேறி குறித்த நபருடன் புத்தளத்திற்கு சென்று மறைந்திருந்தார்.

இதனையடுத்து சிறுமியுடன் தொலைபேசியில் உறவினர்கள் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்த நிலையில் தலைமறைவாகியிருந்த இருவரும் கொக்கட்டிச்சோலைக்கு சம்பவ தினமான இன்று அதிகாலை வந்த நிலையில் பொலிஸார் குறித்த சிறுமியை மீட்டனர்.

பின்னர் அவரை அழைத்துச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும், இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: