ஏறாவூர் நகர சபையின் புதிய சந்தை வியாபாரிகளுக்கான மீள் விண்ணப்பம் கோரல் தொடர்பான இறுதி அறிவித்தலொன்றை ஏறாவூர் நகரசபை வெளியிட்டுள்ளது.
2021.11.05ஆம் திகதிய 2253ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகையில் மூன்று மொழிகளிலும் பகுதி IV (ஆ) யில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய சந்தை தொடர்பான விளம்பரத்திற்கமைவாக எதிர் வரும் 2021.12.31 ஆம் திகதிக்கு முன் இச் சந்தையில் வியாபாரம் செய்வதற்கான குத்தகை உரிமையினை பெற்றிருந்தவர்கள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து குறித்த சந்தையில் வியாபாரம் செய்ய விரும்பின் குத்தகை உரிமையை பெற்றிருந்தமை தொடர்பிலான உரிய ஆவணங்களை அலுவலக நேரத்தில் சபையின் செயலாளரிடம் சமர்ப்பித்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தவறும் பட்சத்தில் குறித்த சந்தையின் குத்தகை உரிமையினை இழந்தவறாக கருதப்படுவர் என்பதனையும் கவனத்திற் கொள்ளவும் என்று ஏறாவூர் நகர சபையினால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: